அரசுப் பேருந்துகளில் 1.20 லட்சம் பேர் முன்பதிவு
சென்னை, நவ.8- அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
சென்னை மற்றும் அதனை ஒட்டி யுள்ள பகுதிகளில் வசித்து தொழில் செய்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாட விரும்புகிறார்கள். கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்கள் குடும்பத்துடன் பண்டி கையை கொண்டாட செல்வதால் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்தது.
கூட்ட நெரிசல் இல்லாமல் முன் பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை கோயம்பேட்டில் நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்கு மேலும் 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவ.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளன. வழக்கமாக தின மும் இயக்கப்படும் 2100 பேருந்து களுடன் கூடுதலாக 1365 பேருந்துகள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.
சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் இருந்து மட்டும் செல்ல 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் 13 ஆம் தேதியும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வெளியூர் செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பேருந்து நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதுவரையில் 1500க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நடந்துள்ளது.முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வருபவர்கள் நேராக பேருந்துகளில் பயணிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘வீரதீரச் செயல் விருதுக்கு பரிந்துரைக்கலாம்
சென்னை, நவ.8- 2024-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக் கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை களை கோரியுள்ளது.
அது தொடர்பான செய்தி குறிப்பு வருமாறு:-
வீர, தீரச் செயல்களுக்கான “அண்ணா பதக்கம்” ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. வீர, தீரச் செயல் புரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த பதக்கத்தை பெறுவதற்கு தகுதி உடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்கள் (சீருடை பணியாளர்கள் உட்பட) மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும்.
பதக்கம் பெற வயது வரம்பு ஏது மில்லை. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டதாகும். இப்பதக்கம் முதலமைச்சரால் 26.01.2024 குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
2024-ஆம் ஆண்டிற்கான ‘வீரதீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் கோரப்படு கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சென்னை, நவ.8- அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது.
தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்த ரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசார ணைக்கு எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இந்த முறை யீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்து, எண்ணிடும் நடைமுறைகள் முடிவுற்றால் இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (நவ.10) விசார ணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரி வித்தனர்.