டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க விசாரணைக் குழு அமைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிக்காக நடத்தப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்குவதற்காக விசாரணைக் குழுவை அமைக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவும் தேர்வாணையத்துக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.