சென்னையில் கொரோனா நோயாளி தற்கொலை
சென்னை,மே 26 - சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்க ளின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 82 ஆக அதிக ரித்துள்ளது. கொரோனாவுக்கு 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயி ரிழந்தோர் எண்ணிக்கை 118-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் திங்க ளன்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது. 5 ஆயிரத்து 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 84 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட 50 வயது டைய நபர் தொற்று உறுதி செய்யப்பட்டு திங்களன்று பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறப்பு விமானத்தில் துபாயில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா
சென்னை, மே 26- சிறப்பு விமானத்தில் துபாயில் இருந்து சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு நகரங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்க ளில் இருந்து ஏஜெண்டுகள் மூலம் முறை யான ஆவணங்கள் இன்றி வேலைக்கு சென்று சிக்கியவர்கள், சிறை தண்டனை காலம் முடிந்தும் கொரோனா தொற்று ஊரடங் கால் சொந்த நாட்டுக்கு திரும்பி வர முடி யாமல் தவித்தனர். மத்திய அரசின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து ஐக்கிய எமிரேட்ஸ் அரசு, தங்கள் நாட்டு விமானங்களில் அவர்களை திருப்பி அனுப்பி வைத்தது. அதன்படி துபாயில் இருந்து முதல் சிறப்பு விமானம் 18-ந்தேதி 5 பெண்கள் உள்பட 178 பேருடன் வந்தது. இதில் வந்த 23 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. கடந்த 24-ந்தேதி 2-வது சிறப்பு விமானம் 100 பேருடன் வந்தது. இவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, ஆவடி விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையில் இவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். சென்னை கொரட்டூர், சாமி அவென்யூ, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 30). அதேபோல் மண்ணி வாக்கம், மண்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் வாசு(54). இவர்கள் இருவரும், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். திங்களன்று மதியம் பணி முடிந்ததும் வாசுவை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்காக ராமானுஜம் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு வந்தார். ‘டியூப் லெஸ்’ டயர் என்பதால் வாகனத்தின் டயரில் இருந்து காற்று இறங்கியதை இருவரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. முடிச்சூர் பெரிய ஏரி அருகே வண்டலூர் வெளிவட்ட சாலையில் வேகமாக வந்தபோது, டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறமாக இழுத்துச் சென்றது. அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறிய வாசு கீழே விழுந்ததில் அவரின் முகம் சாலையில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமானுஜம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி பலியானார். இது குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டில் 22 பேருக்கு கொரோனா உறுதி
செங்கை, மே 26- செங்கல்பட்டு மாவட்டத் தில் செவ்வாயன்று 22 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 857-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்க னவே 832 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் செவ்வாயன்று (மே 26) ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் பாதிக் கப்பட்டோர் எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 258 பேர் குண மடைந்து வீடு திரும்பி யுள்ளனர். 9 பேர் உயிரி ழந்தனர்.
திருமழிசை சந்தையில் தினமும் வீணாகும் 2 லட்சம் கிலோ காய்கறிகள்
சென்னை, மே 26- திருமழிசை மார்க்கெட்டுக்கு வியாபாரி கள் வரத்தும் குறைந்து உள்ளதாலும், காய் கறிகளை சேமித்து வைக்க போதுமான குடோன் வசதி இல்லாததாலும் தினசரி 2 லட் சம் கிலோ காய்கறிகள் வீணாகி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்தும் விதமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. இதையடுத்து பூ, பழம் மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கும், காய்கறி மொத்த விற்பனை திருமழிசைக்கும் மாற்றப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. சில்லரை காய்கறி விற்பனை கடைகளுக்கு இதுவரை மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. திருமழிசை மார்க்கெட்டிற்கு தினசரி 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வரு கின்றன. திருமண விழாக்கள், விருந்து, உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் ஊரடங்கு கார ணமாக தற்போது நடைபெறாததால் காய்கறி கள் தேவை குறைந்து உள்ளது. மேலும் மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்தும் குறைந்து உள்ளதாலும், காய்கறி களை சேமித்து வைக்க போதுமான குடோன் வசதி இல்லாததாலும் தினசரி 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாகி அங்கு தரை யில் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி சங்க நிர்வாகி சுகுமார் கூறியதாவது:- திருமழிசை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக அதிகாலை 2 மணி முதல் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. வியாபாரிகளின் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கோயம்பேடு சில்லரை வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாததால் இங்கிருந்து காய்கறிகள் வாங்கி சென்று மினி வேன்கள் மூலம் கோயம்பேடு, விருகம்பாக்கம், நெற் குன்றம், மதுரவாயல் சுற்று வட்டார பகுதி களில் சாலையோரம் மற்றும் அங்குள்ள காலி இடங்களில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் வியாபாரிகளின் வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் வரை அபரா தம் விதித்துள்ளனர். அதிகாரிகளின் இது போன்ற கெடுபிடி காரணமாக வியாபாரிகள் பலர் பாதிக்கப்பட்டு காய்கறி விற்கும் தொழி லையே விட்டுவிட்டனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து பல தொழில் நிறுவனங்களுக்கு இங்கிருந்து காய் கறிகள் வாங்கி செல்வது வழக்கம். ஆனால் தற்போது அது முற்றிலும் தடைபட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடை யும் காய்கறிகள் பெரும்பாலும் வீணாகாமல் மறுநாள் காலையில் விற்பனை செய்து விடுவோம். ஆனால் இங்கு ஷீட் போட்டு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் காய்கறிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு போதிய வசதி கள் இல்லை. இதன் காரணமாக விற்பனையா காமல் தேக்கமடையும் பச்சை காய்கறிகள் கேரட், முட்டை கோஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் 200 டன் வரை வீணாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.