tamilnadu

img

நட்சத்திரம் போல காட்சியளித்த விண்வெளி ஆய்வு மையம்!

சென்னை, மே 11- நாசா அறிவித்தபடி சர்வதேச விண்வெளி மையத்தை சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் மிக எளிதாக காண முடிந்தது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்பது மனிதர்களால் உரு வாக்கப்பட்ட விண்கலம் ஆகும். 1998-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா, ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம், ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்டவை இணைந்து இதனை உருவாக்கின.

109 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம், 450 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 93 நிமிடத்திற்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 15.5 முறை சுற்றிவரும் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் பூமியிலிருந்து 400 முதல் 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது.

இந்த சர்வதேச விண்வெளி மையம் பூமியில் நிகழும் பல்வேறு நிகழ்வுகள் மட்டுமன்றி வானியல் நிகழ்வையும் ஆய்வு செய்து வருகிறது. இந்த சர்வ தேச விண்வெளி மையத்தை வெள்ளி யன்று சென்னை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் என நாசா தெரிவித்திருந்தது.

அதன்படி சர்வதேச விண்வெளி ஆய்வு விண்கலம் இந்தியாவை கடந்து சென்றபோது, இரவு 7.09 மணிக்கு தொடங்கி 7.16 வரை 7 நிமிடங்கள் சென்னை மக்கள் வெறும் கண்களா லேயே பார்த்து மகிழ்ந்தனர்.