மக்களவைத் தேர்தல் விருப்பமனு அளித்தவர்களிடம்
திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல்
மக்களவைத் தேர்தல் விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல்
நேர்காணலின்போது, தொகுதி நில வரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதில், நாமக்கல், விழுப்புரம், சிதம்பரம், இராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி தொகு திகளுக்கு மட்டும் நேர்காணல் நடை பெறவில்லை. விரைவில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ப தால், ஓரிருநாட்களில் வேட்பாளர் பட்டி யல் வெளியிட திமுக தலைமை திட்டமிட் டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தில் காவலர் பலி ரூ.25 லட்சம் நிவாரணம்
சென்னை, மார்ச் 10- சீர்காழி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பா ளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் உயிரிழந்துள் ளது காவல்துறைக்கும், அவரது குடும் பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதிவழங்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
3,000 புதிய பேருந்துகளுக்கு டெண்டர்
சென்னை, மார்ச் 10- நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்து கள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்து துறை டெண்டர் கோரியுள்ளது.
போக்குவரத்துத்துறைக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டி ருந்தது. 1190 மாநகரப் பேருந்துகள், 672 மாநகர தாழ்தளப் பேருந்துகள், 1,138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வுள்ளன; நடைமுறையில் உள்ள காலா வதியான பேருந்துகளுக்கு மாற்றாக அடுத்த நிதியாண்டில் புதிய பேருந்துகள் பயன் படுத்தப்பட உள்ளன.
முதுகில் குத்தினார்களாம்!
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக் கட்டு சட்டமன்றத் தொகுதி புதிய நீதிக்கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார் (திமுக) சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறை என்னை இந்த தொகுதி யில் எம்.பியாக்குகிறேன் என நிற்க வைத்து அதிமுகவினர் என் முதுகில் குத்தி தோற்கடித்துவிட்டனர். அதிமுகவிற்கு விழ வேண்டிய ஓட்டுகளை அதிமுகவினரே வேறு கட்சிக்கு மாற்றி விட்டனர். அதனால் தான் தற்போது பாஜகவிடம் கூட்டணி சேர்ந்துள் ளேன். ஜெயித்தால் மோடி அமைச்சர் பதவி கொடுப்பார். இல்லா விட்டாலும் வேறு ஏதாவது பதவிக் கொடுப்பார் என்று கூறினார்.
22 மீனவர்கள் கைது
காரைக்கால், மார்ச் 10- காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை யினர் ஞாயிறன்று அதிகாலை கைது செய்தனர்.
ர்ந்த சுதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக் கால்மேடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கந்தசாமி (43), கிளிஞ்சல் மேடு பி.சுந்தரமூர்த்தி (44), தமிழகப் பகுதியான நாகை, மயிலாடு துறை மாவட்டங்களைச் சேர்ந்த கூழையார் எஸ்.காளிதாஸ் (34), ஏ.ஸ்ரீராம் (24), தரங்கம்பாடி பி.ஆனந்தபால் (50), பெருமாள் பேட்டை ஆர்.புலவேந்திரன் (42), கே.கவியரசன் (34), ஏ.சிங்கா ரம் (33), புதுப்பேட்டை ஆர்.மதன் (25), ஆர்.அன்புராஜ் (39), ஆர். ராஜ்குமார் (23), புதுப்பேட்டை வி.கிஷோர் (29), பொன்னாந்திட்டு எஸ்.நவீன் (22), செருதூர் சி.நவீன்குமார் (18), நாகப்பட்டினம் எஸ். செந்தில் (35) ஆகிய 15 பேர் நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஞாயிறன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டி ருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை யினரால் 15 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ஏழு மீனவர்களையும் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது.