பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும், எல்ஐசி முகவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் த.ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினர் சம்பத், கிளைச் செயலாளர் புண்ணியமூர்த்தி, நிர்வாகிகள் ஜெயபால், குமார், மதியழகன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
***************
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் கோட்டபொதுச்செயலாளர் தா.வெங்கடேசன், கே.ரவிக்குமார் ஜி.ராமமூர்த்தி, செல்வம், மோகனவள்ளி, ஜெயக்குமார், மணி, தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
***************
ஓசூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவர் முருகன் நாயனார், நிர்வாகிகள் ராமன், ஆறுமுகம், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.