சென்னை, மார்ச் 2 - வங்கி அதிகாரிகள் நியமன முறையில் எழுத்துத் தேர்வை நீக்கி விட்டு, இனி அந்த நியமனங்கள் நேர்காணல் மூலம் நடைபெறும் என்ற ஒன்றிய பாஜக அரசின் அறி விப்புக்கு மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்க டேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஒன்றிய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் ஆகியோ ருக்கு கடிதம் எழுதியிருக்கும் சு. வெங்கடேசன் எம்.பி., ஒன்றிய அரசு தனது அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளார்.
கடிதத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய சிறு தொழில் மேம் பாட்டு வங்கி அதிகாரிகள் நியம னங்களுக்கான முறைமையில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் வெளிச் சந்தையில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு பேரதிர்ச்சி தருவதாக உள்ளது.
இவ்வாண்டு வெளியிடப் பட்டுள்ள அறிவிக்கையில் முன் பணி அனுபவம் கட்டாயத் தகுதி யாக இணைக்கப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட வணிக வங்கி களில் 2 ஆண்டுகள், தனியார் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் மட்டுமே விண்ணப்பம் செய்ய இயலும் என்பதே அது. கடந்த காலப் பணி நியமனங்களில் இந்த நிபந்தனை கிடையாது. இது வேலைக்காக வெளியே காத்திருக் கும் புதிய தேர்வர்களுக்கு, முன் பணி அனுபவம் இல்லாத கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டு நியமனத் தேர்வில் பங்கேற்க இயலாமல் வெளியே நிறுத்துவது ஆகும்.
தேர்வு முறைமையில் எழுத்துத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது. குழு விவாதம், நேர்காணல் வாயிலாகத் தேர்வு நடைபெறும் என்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லா வங்கிகளிலும் நுழைவு நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வுகள் நடைமுறையில் உள்ளன. இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியின் உள் பதவி உயர்வுகளுக்கே எழுத்துத் தேர்வுகள் உள்ள நிலையில் புதிய நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு இல்லை என்ற முரண்பாடு வியப்பைத் தருகிறது.
இத்தகைய மாற்றம் தமிழ் வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளி களில் பயிலும் எளிய மாணவர்க ளுக்கு போட்டியில் சம வாய்ப்பை மறுப்பதாகவும் இருக்கும். மேலும் எழுத்துத் தேர்வை நீக்கிக் குழு விவாதம், நேர்காணல் மட்டுமான முறைமை வெளிப்படைத் தன்மை அற்றதாகவே அமையும். இது தனி நபர் விருப்பு வெறுப்புகள், வெளித் தலையீடுகளுக்கு வழி வகுப்பதுமாகும்.
ஆகவே புதிய முறைமையை கைவிட்டு, முன் அனுபவ நிபந்த னையை நீக்கி, எழுத்துத் தேர்வு டன் கூடிய முந்தைய நியமன முறை மைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.