tamilnadu

img

குடும்ப வன்முறையை தடுப்போம், சமத்துவம் படைப்போம் - விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழகத்தில் குடும்ப வன்முறையை தடுத்து சமத்துவம் படைக்கும் நோக்கில்
விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
"சென்னையில் நடத்தப்பட்ட குடும்ப வன்முறை எதிர்ப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட
முடிவின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் 1-5 தேதிகளில், ஏதேனும் இரண்டு நாட்கள்,
வீடுவீடாகவும், கல்வி நிலையங்கள், பொது இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகம்
செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என சிபிஎம் மாநிலக்குழு
தீர்மானித்துள்ளது. சமத்துவம், ஜனநாயகம் மிக்க ஆரோக்கியமான குடும்பங்களை
உருவாக்க வலியுறுத்தப்படும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.