சென்னை, ஜன.29- ‘ஜனவரி 30’ மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாக கடைப்பிடிக்குமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தியின் நினைவு நாளை (ஜன.30) முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
“என் மதத்தின் மீது சூளு ரைத்தே சொல்கிறேன். என் மதத் திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அர சுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடை யாளப்படுத்திக் கொண்டவர்.
அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக் கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர்.ஒற்றை மதவாத தேசிய வாதத்தை காந்தி ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு காந்தி பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறைய வில்லை.
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலது சாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை. ‘காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க வில்லை’ என்று தமிழ்நாடு ஆளு நர் ஆர்.என். ரவி சொல்லி இருப்ப தும் இதே வன்மம் கலந்த நோக்கத் துடன்தான். தேசத்தந்தை என்று போற்றப் படும் காந்தியடிகளை, பொய்களா லும் அவதூறுகளாலும் கொச்சைப் படுத்தும் காலமாக மாற்றிக் கொண் டிருக்கிறார்கள். அவரது கொள்கை கள் மட்டுமல்ல, அவரே இழிவு படுத்தப்படுகிறார்.
இது, நிகழ் காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்ப தற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும். மதநல்லிணக்கத்தின் அடையா ளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட நாளான ‘ஜனவரி 30’-ஐ, நாடு முழுவதும் மதநல்லி ணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கட மையாகும். மதச்சார்பற்ற ஜனநாய கச் சக்திகள் இதில் கவனம் செலுத்தி யாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது.
எனவே, வருகின்ற ஜனவரி 30 அன்று மதநல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தியா முழுமைக் குமான ஒற்றுமையின் அடையாள மாக இருக்கின்ற அண்ணல் காந்தி யின் புகழைச் சிதைப்பதன் மூல மாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கி றார்கள். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை ‘சுவச் பாரத் அபி யான்’ என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடை யாளங்களையும் அழித்தல் ஆகும்.
அதேபோன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2 அன்று ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனை தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை. எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்க ளின் மனதில் குடியிருக்கிறார் அண் ணல் காந்தி. நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கை களுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண் டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லி ணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற் கச் செய்ய வேண்டும்.
வேற்றுமை யில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், எல் லோர்க்கும் எல்லாம் என்ற தமிழ் நாட்டின் மாண்பையும் இந்திய மத்தியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப் பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும். மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம், வாழ்க அண் ணல் காந்தியின் புகழ்.” இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டா லின் கூறியுள்ளார்.