tamilnadu

எல்.இ.டி. டிவி, லேப்டாப் கொள்ளை

ஆவடி,நவ.19-  திருமுல்லைவாயல் அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், ராமாயணம் தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (49). இவர் பாடியில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தாம்பரத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று இருந்தார். பின்னர் திங்களன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த எல்.இ.டி. டிவி, லேப்டாப், வெள்ளி டம்ளர் மற்றும் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை மர்ம கும்பல் திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது. அதேபோல் ஆவடி காமராஜர் நகரில் வசித்து வருபவர் சுரேஷ். பொறி யாளர். திங்களன்று அதி காலை இவரது வீட்டு பூட்டை மர்ம நபர் உடைத்த சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதும் கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் ரோந்து சென்றபோது காமராஜர் நகர், பெருமாள் கோவில் அருகே சந்தேகத்திற் கிட மாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.  சுரேஷ் வீட்டில் கொள்ளை யில் ஈடுபட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் பாஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்..