tamilnadu

img

சட்டப்பேரவைத் தேர்தல்.... சிபிஎம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைப்பு....

சென்னை:
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. 

இக்குழுவில் பெ.சண்முகம், உ.வாசுகி, என்.குணசேகரன், க.கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி, ஜி.சுகுமாறன், எஸ்.கண்ணன், பி.சுகந்தி, தீபா, கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு தமிழகம் முழுவதும் சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஏழை, எளிய, நடுத்தர பகுதி மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக நேரில் சென்று கலந்துரையாடி அவர்களது பிரச்சனைகளை கண்டறிவதோடு, தமிழத்தின் வளர்ச்சி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் பயிற்று மொழி மற்றும் நீதிமன்ற மொழியாக செயல்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வார்கள் என்று மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பிரச்சனைகள் குறித்து தங்களது கோரிக்கைகள், பிரச்சனைகளை cpimtn2009@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும், சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு பொதுமக்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.