தோழர் ஜி.மணி 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தலைவர்கள் மரியாதை
திருவள்ளூர், ஜூன் 5- விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின், மறைந்த முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் ஜி.மணியின் 4ஆம் ஆண்டு நினைவு தினமான வியாழனன்று (ஜுன் 5) பொன்னேரியில் உள்ள அவரது கல்லறைக்கு தலைவர்கள் மாலை அணி வித்து அஞ்சலி செலுத்தினர். தோழர் மணி நினைவேந்தல் நிகழ்வில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் வி.மாரியப்பன், மாவட்ட தலைவர் இ.தவமணி, செயலாளர் அ.து.கோதண்டன், சிபிஎம் மாவட்ட செய லாளர் எஸ்.கோபால், செயற்குழு உறுப்பி னர்கள் கே.விஜயன், ஜி.சம்பத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.எம்.அனீப், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்கள் இ.ராஜேந்திரன், டி.சரளா, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.அருள், கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சி.சீனு, துணைத் தலைவர் எம்.நாகராஜ், தோழர் ஜி.மணியின் மகன் எம்.தினேஷ்குமார், மருமகள் பிரதிபா, மகள் சித்ரா ஆகியோர் கலந்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மற்றும் விவசாய தொழி லாளர்களின் நலனுக்கும், சங்க வளர்ச்சிக்கும் பாடுபட்டு, ஏராளமான ஊழியர்களை உருவாக்கிய ஜி.மணியின் பணியினை தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.