சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமுடன்உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தலைவர்கள் இரா.முத்தரசன், சி.மகேந்திரன்,காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் து.ரவிக்குமார், முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அலைபேசி மூலம் கே.பாலகிருஷ்ணனிடம் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தனர்.