tamilnadu

கட்டுமான நிறைவு சான்று இல்லாத  மின் இணைப்புக்கு தடை

சென்னை:
கட்டுமான நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின்இணைப்பு தரலாம் என்ற அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.கோவை நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில் டான்ஜெட்கோ ஆணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.புதிய மின்இணைப்புக்கு கட்டடபணி முடிப்பு சான்றிதழ் கட்டாயம் என்பதை வாபஸ் பெற்றதற்கு எதிராக மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.