சென்னை:
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழக அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அக்கறை காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளது.