சென்னை:
கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு கிடந்த சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த காய்கறி விற்பனை கடைகள் ஞாயிறன்று (செப்.27) நள்ளிரவு முதல் மீண்டும் திறக் கப்பட்டன.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மே மாதம் ஐந்தாம் தேதி சென்னை கோயம் பேடு காய்கறி, மலர் சந்தை மூடப்பட்டது.பின்னர் வணிகர்களின் கோரிக் கையை ஏற்று தீவிர ஆய்வுக்கு பிறகு சந்தையை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இதனையடுத்து மார்க்கெட் வளாகம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. அந்த பணிகள் முடிந்தது அடுத்து, கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து பணியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் கடைகள் திறக்கப்பட்டன.
வாடிக்கையாளர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமி நாசினி வைக்கவும் அறிவுரை வழங் கப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப் பட உள்ளது.பிரதிவாரம் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நபர்கள், இருசக்கர வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள் ளது.காய்கறி கடை பணியாளர்கள், தொழிலாளர்களின் விவரங்களை உரிமையாளர்கள் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.