சென்னை, பிப்.28- குலசேகரப்பட்டினத்தில் ராக் கெட் ஏவுதளம் அமைத்திட வேண் டும் என்ற கலைஞரின் கனவு நன வாகியுள்ளதாக தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத் தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கனிமொழி எம்.பி. மேலும் கூறியிருப்பதாவது:
“நாட்டின் 2-ஆவது ராக்கெட் ஏவு தளத்தை குலசேகரப்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என 2013-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கலைஞர் கடிதம் எழுதி யிருந்தார். தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள், அதிகாரி கள் சந்திப்பு என ராக்கெட் ஏவு தளம் அமைத்திட திமுக விடா முயற்சி மேற்கொண்டது. கலை ஞர் கடிதத்தை குறிப்பிட்டு ஏவு தளம் வேண்டுமென மாநிலங்கள வையில் கோரிக்கை வைத்தேன். 2014 ஜூலை பாஜக ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவுதளம் வேண்டுமென வலியு றுத்தினேன்.
2018-இல் குலசேகரப்பட்டினத் தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்ப தன் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப் பட்டதால் மங்கள்யான் செயற்கை கோள் 1350 கிலோ எடையுள்ள சாத னங்களையே கொண்டு செல்ல முடிந்தது.
குலசேகரன்பட்டினத் தில் இருந்து மங்கள்யான் செயற்கைகோள் ஏவப்பட்டிருந் தால் 1800 கிலோ எடையுள்ள சாத னங்களை கொண்டு சென்றிருக்க முடியும் என சுட்டிக்காட்டினேன். 2019 ஏப்ரல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்பதை வாக்கு றுதியாக அளித்தேன்.
2019-ஆம் ஆண்டு மக்களவையில் மீண்டும் கோரிக்கை வைத்தேன். இதன் தொடர்ச்சியாகவே 2023 ஆகஸ்டில் ஏவுதளம் அமைத்திட ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி யது. திமுக-வின் 10 ஆண்டுகால விடாமுயற்சியால் குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட் டது”. இவ்வாறு அவர் பேசினார்.