சென்னை, மார்ச் 27- திருவொற்றியூரில் வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் கலா நிதி வீராசாமி உற்சாகத்துடன் பிரச் சாரத்தை துவக்கினார். பொதுமக்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
வட சென்னை மக்களவைத் தேர்த லில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றிக்கு தொகுதிக் குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வேட்பாளர் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதை யடுத்து திருவொற்றியூர் பெரியார் நகர் 8ஆவது வட்டத்தில் இருந்து மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் பிரச் சாரம் புதனன்று (மார்ச் 27) துவங்கி யது. முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு வேட்பாளர் கலாநிதி வீரா சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் 9ஆவது வட்டம் ம.வே.நாரா யணசாமி நகர், 10ஆவது வட்டம் சன்னதி தெரு, வடக்கு மாட வீதி, ஒத்த வாடை தெரு, சடையன்குப்பம் பாட்டை, மேற்கு மாட வீதி. 11ஆவது வட்டம் பெரிய மேட்டுப்பாளையம், சின்ன மேட்டுப்பாளையம், மார்க்கெட் லேன், கணக்கர் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, டி.எச். ரோடு, சத்திய மூர்த்தி நகர். 12ஆவது வட்டம் வன்னி யர் தெரு, செட்டித் தெரு, எழுத்துக்கா ரன் தெரு, கவரை தெரு, ஜான்ராவர் தெரு, வசந்தா நகர், சாத்தாங்காடு நெடுஞ்சாலை, பிகேஎன் காலனி, குமரன் நகர், வீரராகவன் தெரு, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி. 13ஆவது வட்டம் கிராமத் தெரு, மேட்டுத் தெரு, எம்.ஜி.ஆர் சாலை, வரத ராஜன் கோயில் தெரு, சேஷாச்சல கிரா மணி தெரு, காந்தி நகர், உதயசூரியன் தெரு. 14ஆவது வட்டம் ராஜாகடை, மல்லிகாபுரம், திருச்சினாங்குப்பம், நல்ல தண்ணீர் ஓடை குப்பம், ‘ஏ’ சதா னந்தப்புரம், ‘பி’ சதானந்தப்புரம், புதிய காலனி, பீர் பயில்வான் தர்கா ரோடு, தியாகராயபுரம், 1,2,3,4 குறுக்கு தெருக்கள் அகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று மக்களையும், வணி கர்களையும் சந்தித்து வாக்கு சேகரித் தார்.
அனைத்து இடங்களிலும் பொது மக்களும், வணிகர்களும் உற்சாக மாக வரவேற்பளித்து, தங்கள் ஆத ரவை தெரிவித்தனர். பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டனர்.இதில் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பி னர்கள் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், தொகுதி மேற்பார்வையாளர் சி.தசர தன், மண்டலக் குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம், இதில் திமுக பகுதிச் செயலாளர் வை.ம. அருள்தாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், டி.பாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, விசிக மாவட்டச் செய லாளர் பா.இளங்கோவன், மதிமுக மாவட்டச் செயலாளர் டி.சி.ராஜேந்தி ரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பி.சம்சுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.எம்.எஸ்.அப்துல்சமது உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.