tamilnadu

img

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவேன்

சென்னை, மார்ச் 30- அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவேன் என்று ராயபுரம் வாக்கு சேகரிப்பின் போது கலாநிதி வீராசாமி வாக்குறுதி அளித்தார். வட சென்னை மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் போட்டியிடும் கலாநிதி வீரா சாமி ராயபுரத்தில் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ரூ.1 கோடியே 30 லட்சம்  மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள், ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தேவையான மருத்துவ உபகரணங்கள், கொருக்குப் பேட்டை சீனிவாசபுரத்தில் ரூ.30 லட்சம்  மதிப்பீட்டில் பன்நோக்கு கட்டிடம்,  லாலா குண்டா பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை, ராமநாதபுரம் கிழக்கு, மேற்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் இருக்கை, மேசை உள்ளிட்ட பொருட்கள் வழங்கியதை எடுத்துரைத்தார்.

தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் ராயபுரம் பகுதியில் உள்ள தொழிற் சாலைகளின் சமூக நிதி என மொத்தம்  11 கோடியே 38 லட்சம் ரூபாய் பணி களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்தால் அரசு மருத்துவ மனைகளை, அரசு பள்ளிகளை மேம்படுத்துவேன் என்றும் பல்வேறு நல திட்டங்களை கொண்டு வருவேன் என்றும் அவர் கூறினார்.  

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஐட்ரீம் மூர்த்தி, பகுதிச் செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், இரா.செந்தில்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், செல்வம், தாவித், செல்வானந்தம், திரவியம் (காங்கிரஸ்), த.கு.வெங்கடேஷ் வேம்புலி  (சிபிஐ), சு.ஜீவன் (மதிமுக) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.