சென்னை, ஆக. 7- முன்னாள் முதல்வர் கலைஞர் கருணா நிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 7 புதனன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாசாலையில் இருந்து அமைதிப் பேர ணியாக சென்று மெரினாவில் உள்ள நினை விடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னதாக கலைஞர் உருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் , திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தி னர். அதன்பின், அமைதிப் பேரணியாக சென்று, காலை 8.45 மணிக்கு அண்ணா சமாதி யிலும், தொடர்ந்து கருணாநிதி சமாதியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
கலைஞர் சிலை திறப்பு
கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சி காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை, சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.