10 ஆண்டாக கச்சத் தீவை
மோடி மீட்காதது ஏன்?
செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை, மார்ச் 31- கச்சத்தீவு இலங் கைக்கு கொடுக்கப் பட்டது பற்றிப் பேசும் பிரதமர் மோடி, அதில், தவறு நடந்திருந்தால் கடந்த 10 ஆண்டு களில் அதை சரி செய் திருக்கலாமே என்று பிரதமர் மோடியை கேட்டுள்ளார்.
தன்னை ஆளுமையாக கூறிக்கொள் ளும் மோடி, கச்சத் தீவை மீட்காதது ஏன்? என்றும் கேட்டுள்ள அவர், இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவலைப் பற்றி.. நாடாளுமன்றத்திற்குள் புகைக்குண்டு வீசியதைப் பற்றி.. புல்வாமா தாக்குத லில் 44 இந்திய வீரர்கள் பலியானதைப் பற்றி.. சட்டம் ஒழுங்கு சீரழிந்து பற்றி எரியும் மணிப்பூர் பற்றி.. பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து காணமல் போன ரபேல் ஆவணங்கள் பற்றி.. எப்போது பேசுவார் என்றும் கேட்டுள்ளார்.
ஜவாஹிருல்லா பிரச்சாரப் பயணம்
ரப் பயணம் சென்னை, மார்ச் 31- திமுக தலைமையி லான இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சித் தலை வர் எம்.எச். ஜவாஹி ருல்லா தேர்தல் பிரச் சார சுற்றுப்பயணம் செய் கிறார்.
ஏப்ரல் 3 மயிலாடுதுறையில் பரப் புரை மேற்கொள்ளும் அவர், ஏப். 4 - ராம நாதபுரம், ஏப். 6 - நாகப்பட்டினம், ஏப். 7 - கரூர், ஏப். 8 - திருச்சி, ஏப்ரல் 9 - பெரம்ப லூர், ஏப் 10 - திருவள்ளூர், ஏப். 12 - வேலூர், ஏப். 13 - திண்டுக்கல், ஏப். 14 - சிதம்பரம், ஏப். 15 - திருப்பூர், ஏப். 16 - மத்திய சென்னை, ஏப். 17 - ஸ்ரீபெரும்புதூர் என ஜவாஹிருல்லா பிரச்சாரம் மேற்கொள்கி றார்.
ரம்ஜான்: பாலிடெக்னிக் தேர்வுத் தேதி மாற்றம்
சென்னை, மார்ச் 31- ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனி யார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த பருவத் தேர்வு தேதிகள் மாற்றப் பட்டுள்ளன. ஏப்ரல் 10 அன்று நடைபெற விருந்த தேர்வு ஏப்ரல் 24 அன்றும், ஏப்ரல் 12 அன்று நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 25 அன்றும் நடைபெறும் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள் ளது.
எனக்கு எதிராக சதி: ஓபிஎஸ் புலம்பல்
இராமநாதபுரம், மார்ச் 31- பாஜக உடனான ஒப்பந்தப்படி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இராமநாதபுரம் தொகுதி யில் சுயேட்சையாக போட்டியிடு கிறார். இந்நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளார். அப்போது, “இராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் வந்துவிட்டனர். வேட்புமனு தாக் கல் செய்தனர். இந்த சதி திட்டத்தை வகுத்து கொடுத்தது யார் ?. தேடி தேடி கண்டுபிடித்து பன்னீர்செல் வம் என்ற பெயரில் பலரை நிறுத்தி னர். ஆனால், ஓட்டக்கார பன்னீர் செல்வம் என்பது நான்தான். சதிகா ரர்களால், இன்னொரு ஓட்டக்காரத் தேவர் பன்னீர்செல்வத்தை கண்டு பிடிக்க முடியவில்லை” என்று புலம்பித் தவித்துள்ளார்.
மேலும், “அதிமுக சார்பில் நான் பல தேர்தல்களைச் சந்தித்தி ருக்கிறேன். ஆனால், ஒரு சுயேச்சை வேட்பாளராக, நிராயுதபாணியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். அப்படி யிருந்தும் இவ்வளவு ஆதரவு அளிப்பதற்காக, உங்கள் அனை வரது பாதம்தொட்டு வணங்கு கிறேன்” என்றும் பரிதாபத்தை ஏற் படுத்தும் வகையில் பேசியுள்ளார்.