சென்னை, ஜன.9- மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜனை கொலை செய்யும் நோக்கத்துடன் சமூக விரோ திகள், அவரது வீட்டில் புகுந்து தாக் குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
. இதுதொடர்பாக கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மதுரை மாநகராட்சி துணை மேயரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட் டக்குழு உறுப்பினருமான தி.நாக ராஜன் வீட்டில் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். 4 பேர் கொண்ட கும்பல், வீடுபுகுந்து, நாக ராஜன் மற்றும் குடும்பத்தினரை கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். தாக்குதல் நடத்திய இருவரை அங்கிருந்தோர் விரட்டிச் சென்று பிடித்து காவல்துறை வசம் ஒப்ப டைத்துள்ளனர்.
மதுரை மாநகர் மற்றும் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில், 25 ஆண்டு களாக அறிமுகமான, மக்கள் பணி ஆற்றுகிற மார்க்சிஸ்ட் கட்சி ஊழிய ராக நாகராஜன் செயல்பட்டு வரு கிறார். மாநகராட்சிப் பணிக்கு மக்க ளால் தேர்ந்தெடுக்கப் பட்ட நிலை யில் சிறந்த முறையில் பணி செய்து வருகிறார். இந்தப் பின்னணியில் சமூக விரோத கும்பல் அவரையும், அவ ரது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்குடன் நடத்தியிருக் கும் கொடூர வன்முறையை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறை, இத்தாக்குதலில் ஈடுபட்டோர் அனைவரையும், அவர் களை இந்த படுபாதக குற்றத்திற்கு தூண்டியோரையும் உடனடியாக கைது செய்து, கொலைமுயற்சி வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்யவும், நாகராஜன் மற் றும் அவர் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.