சென்னை, ஏப்.6- இந்தியாவை பட்டினி நாடாக மற்றியதுதான் பாஜகவின் சாதனை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சாடினார்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு வியாழனன்று (ஏப்.4) துறைமு கம் பகுதி தம்பு தெரு சந்திப்பில் வாக்கு சேகரித்தார். அப்போது கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வரு மாறு:
ஒன்றிய அரசு, கூட்டாட்சியை சிதைத்து விட்டது. சட்டமன்றம் நிறை வேற்றும் சட்டங்கள், தீர்மானங் களை மதிக்காமல் செயல்படுகிறது. பொதுத்துறைகளை மூடி வேலை வாய்பையும் இடஒதுக்கீட்டையும் பறிக்கிறது.
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாத பிரதமர் மோடியின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபட வில்லை. இந்தியாவில் காற்று மாறி வீச தொடங்கிவிட்டது. இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு நிகரான போராட்டத்தில், பாஜக ஆட்சியை அகற்றி மதச்சார்பின்மையை அரிய ணையில் ஏற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துறைமுகம் பகுதியில் நடை பெற்ற கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் எம்.ஜலால் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் சி.திரு வேட்டை, மூத்த தலைவர் எம்.வி.கிருஷ்ணன், திமுக பகுதிச் செயலா ளர் எஸ்.ராஜசேகர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன் (மதிமுக), பா.கருணாநிதி (சிபிஐ), சேத்பட் இளங்கோ (விசிக) உள்ளிட்டோர் பேசினர்.