சென்னை, ஏப். 5 - பாஜக, அதிமுக டெபாசிட் வாங்கினால் கூட அது அவர்களுக்கு வெற்றி போன்றுதான்; அதற்கும் மக்கள் வாய்ப்பளிக்கக் கூடாது என்று வாக்காளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து வெள்ளியன்று (ஏப்.5) வேளச்சேரியில் கே.பாலகிருஷ்ணன் வாக்கு சேகரித்து பேசியதன் சுருக்கம் வருமாறு: பாண்டிச்சேரியில் இருந்த ரேசன் கடைகளை மூடி, ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வந்த இலவச அரிசியை நிறுத்தியவர்தான் தமிழிசை சௌந்தர்ராஜன். அவருக்கு தென் சென்னை மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? தமிழச்சி தங்கபாண்டியன் 5 லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்.
ஒன்றிய அரசின் கொள்கைதான் விலை வாசிக்கு காரணம். பால், காபி பொடி, சர்க்கரை ஆகியவற்றிற்கு தனித்தனியாக ஜிஎஸ்டி போடுகிறார்கள். இவற்றை ஒன்றாக கலந்த காபிக்கும் ஜிஎஸ்டி போடுகிறார்கள். பருத்தி, அதிலிருந்து வரும் நூல், நெய்த துணி என ஒவ்வொரு நிலையிலும் ஜிஎஸ்டி விதிக்கிறார் கள். இதனால் விலைவாசி கடுமையாக உயர் கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 140டாலராக இருந்தபோது, பெட் ரோலியப் பொருட்களின் விலை குறைவாக இருந்தது.
பீப்பாய் 70 ரூபாயாக குறைந்த நிலை யில், பெட்ரோலியப் பொருட்களின் விலை இரு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது. இப்படி எளிய மக்களிடம் இருந்து 28 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது. டெபாசிட் கூட கிடைக்காது என்பதால்தான் தற்போது கேஸ் விலையை குறைத்துள்ளார்கள். அங்கன்வாடியில் குழந்தைக்கு ஒன்றிய அரசு 90 பைசா ஒதுக்குவதை உயர்த்த மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட்டு களுக்கு 16 லட்சம் கோடி கடன், வரித் தள்ளுபடி செய்கிறார். இது மக்கள் நலன் சார்ந்த நட வடிக்கையா? குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் ஓட்டு போட்டி ருந்தால் சட்டமே வந்திருக்காது. ஒன்றாக இருந்து வெற்றி பெற முடியவில்லை என்பதால் தனித்து போட்டியிடுகின்றனர்.
எப்படிபோட்டியிட்டாலும் பாஜக, அதிமுக ஒரே அணிதான். 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். அதிமுக, பாஜக டெபாசிட் வாங்க போராடுகின்றன. டெபாசிட் வாங்கினாலே அவர் களுக்கு அது வெற்றியாகி விடும். அதற்கும் மக்கள் வாய்ப்பு தரக்கூடாது. இவ்வாறு அவர்பேசினார்.