சென்னை, டிச. 24 - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு தினம் ஞாயிறன்று (டிச.24) கடைப்பிடிக்கப்பட்டது. இதனை யொட்டி சென்னை அண்ணாசாலை யில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய் தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதவெறியை மாய்ப்போம், சாதி யற்ற சமதர்ம சமூகத்தை அமைப்போம் என்ற பெரியாரின் லட்சியத்தை உயர்த்திப் பிடிக்க உறுதியேற்கும் நாளாக இந்நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கிறது. பெரியார் மறைந்தாலும், அவரின் லட்சிய முழக்கங்கள் என்றைக்கும் இந்திய சமூகத்தில் நீடித்து நிலைத்து நிற்கக் கூடியவை.
மதவெறி சக்திகள், ஒன்றிய ஆட்சியில் இருந்து கொண்டு, நாடாளு மன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாய கத்தையும் குழிதோண்டிப் புதைக் கின்றன. மதவெறி ஆட்சியை நிலை நிறுத்த முயற்சிக்கின்றன. பெரியாரின் கனவுகளை நனவாக்க மதவெறி சக்தி களை முடிறியடிக்க வேண்டிய மகத் தான கடமையை நிறைவேற்ற வேண்டி உள்ளது.
பெண்ணடிமைத்தனத்திற்கு முடிவு கட்ட வேண்டும், தீண்டாமைக் கொடு மையை ஒழிக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை போக்க வேண்டும் என்ற லட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் பணியில் மார்க்சிஸ்ட் கட்சி தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் கூட சாதிய உணர்வு, ஏற்றத்தாழ்வுக்கு அடி பணிந்து ஈர்க்கப்படுகிற ஆபத்து ஏற்பட்டுள்ளது. பகுத்தறிவு வழங்கக் கூடிய பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கூட சாதிய அடிப்படையில் செயல்படும், சாதிய உணர்வை வளர்க்கும் கருவூலமாக மாறிக் கொண்டிருப்பதை முறியடிக்க வேண்டும். தமிழகத்தில் சாதியற்ற சமூகத்தை அமைக்கும் மகத்தான போராட்டத்தில், என்றென்றைக்கும் ஈடுபடுவோம்.
இந்தியாவில் பல மாநிலங்கள் மூடப் பழக்க வழக்கங்களை தடுப்பதற்கு சட்டம் இயற்றி உள்ளன. அதே போன்று தமிழகத்திலும் பகுத்தறிவு கொள்கைகளை பறைசாற்றும் சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
செய்தியாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த அவர், தமிழ கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஒன்றிய அரசு, பேரிடராக கருதவில்லை. எனவே, நிவாரணத்தொகையை வழங்க மறுக்கிறது. நிவாரணத்தை வழங்காமல் ஒன்றிய அரசு வித ண்டாவாதம் செய்வதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அர சியலில் நாகரீகமான அணுகுமுறை யை முதலில் பாஜக கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வின்போது கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் கள் இரா. முரளி, எஸ்.கே.முருகேஷ், கே.முருகேஷ், வே.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.வி.வேணுகோபாலன், எம்.பழனி, இரா.அருள்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தந்தை பெரியார் நினைவு தினத்தையொட்டி ஞாயிறன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.