tamilnadu

img

சமூக நீதியை பாதுகாக்க மோடி ஆட்சியை அகற்றுவது அவசியம்

சென்னை, மார்ச் 6 - சமூக நீதியைப் பாதுகாக்க மோடி ஆட்சியை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவது மிக மிக அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார்.

ஆதித்தமிழர் கட்சியின் ‘சமூக நீதி காப்போம்’ மாநாடு புதனன்று (மார்ச் 6) சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று கே.பால கிருஷ்ணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:

‘இந்தியா’ கூட்டணி நாடு முழு வதும் முன்னேறுகிறது. அண்ணா மலை கனவு காண்பது போல தாமரை மலராது. தமிழகத்தில் கருகிப் போகும். பாஜகவுடன் சேர்ந்தால் தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்தே அதிமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டது. வட மாநிலங்களிலும் மோடிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தலைநகர் தில்லியை நோக்கி விவசாயி கள் அணி வகுத்துக்கொண்டு இருக் கிறார்கள். கிராமப்புற ஏழை - எளிய மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 100 நாள் வேலைத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அந்த திட்டத்திற்கான பணத்தையும் எடுத்து அம்பானி, அதானிக்கு மோடி தந்து கொண்டு இருக்கிறார்.

மனுஅதர்ம ஆட்சி
மோடி அரசு இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கிறது. சட்டப்பூர்வ மாக சில வேலைகளை செய்து கொண்டே; மறைமுகமாக அரசு வேலைகள், பொதுத்துறை வேலை வாய்ப்புகளை காலி செய்துவருகிறது.  ஒன்றிய அரசில் 19  லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதை நிரப்பினால் எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு லட்சக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும். அதை செய்யாமல்,  தனியார்மயமாக்கி வருகின்றனர். பொதுத் துறைகள் தனியார்மய மாவது சமூக நீதிக்கு எதிரானது. மோடி ஆட்சி தொடர்ந்தால் பொதுத்துறையும் இருக்காது. சமூக நீதி, இட ஒதுக்கீடும் இருக்காது.

டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம்தான் அனைவரும் சமம் என்று பிரகடனப்படுத்தியது. அந்த அரசியல் சாசனத்தை அழித்து, மநுஅதர்மத்தை அரசியல் சாசன மாக்க முயற்சித்து வருகின்றனர். சாதிய மேலாதிக்கத்திற்கு வழி வகுக்கிற ஆட்சி இது. இன்றும் பட்டி யல் சாதியினர் பொதுத் தெருக்களில் நடமாட முடியாத, கோயில்களில் நுழைய முடியாத நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக அருந்ததிய மக்கள் மிக அதிகமான ஒடுக்குமுறை களுக்கு ஆளாகின்றனர். ஒரு தலைவர் அருந்ததியர்களை நாடோடிகள் என்கிறார். அருந்ததியர் ஒன்று திரண்டால் இப்படிப் பேசுகிறவர்கள் நாடோடிகளாவார்கள்.

ஆட்சி மாற்றம்
கம்யூனிச இயக்கம் பட்டியல் சாதி மக்களுக்காக, அருந்ததிய மக்க ளுக்காக பாடுபடுகிறது; களம் காண்கிறது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு கோரிக்கையை எழுப்பிய ஒரே அரசியல் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். கலைஞர் அக்கோரிக்கையை ஏற்று உள் ஒதுக்கீடு கொண்டு வந்தார். இது போன்ற உள் ஒதுக்கீடுகள் ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களில் வந்தபோது உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டன.  அவற்றோடு தமிழ கத்தில் வழங்கப்பட்ட உள்ஒதுக்கீடு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் உள் ளது. சட்டம் கொண்டு வரவும், அதை அமலாக்கவும், பாதுகாக்கவும் போராட வேண்டி உள்ளது. 15 ஆண்டு களாக அமலில் உள் ஒதுக்கீட்டை பாது காக்க சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வருகிறோம். சாதி ஒழிப்பு என்ற நிலையை நோக்கி தொடர்ந்து முன்னேறுவோம்.

இந்த மாநாடு, மநுவாத பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டவும், உள்ஒதுக் கீட்டை பாதுகாக்கவும், சாதியை ஒழித்து சமத்துவ சமதர்ம சமுதா யத்தை உருவாக்கவும் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டிற்கு ஆதித்தமிழர் கட்சியின் தலைவர் கு.ஜக்கையன் தலைமை தாங்கினார். திமுக அமை ப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் கனி மொழி எம்.பி, சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மதி முக பொருளாளர் செந்திலதிபன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாநிலப் பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், துணைப் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் உள்ளிட் டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.