சென்னை,பிப்.7- தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை சூரப் பட்டு, போரூர், தாம்பரத்தில் ஏற்றி இறக்க அனுமதிக்கப் படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்று கடந்த ஜனவரி 24 அன்று போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு புதனன்று (பிப்.7) விசார ணைக்கு வந்தபோது தமிழ் நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், தற்போது சென்னையில் சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் என்றும் பெருங்களத்தூரில் பயணி களை இறக்கி விட மட்டும் அனுமதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது தாகவும் தெரிவித்தார்.
அப்போது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாரா யணன், அனைத்து ஆம்னி பேருந்துகளின் கேரேஜ்கள் கோயம்பேட்டில் உள்ள தால், கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார். அதேபோல் தனியார் ஆம்னி பேருந்துகள் நகருக் குள் பயணிகளை ஏற்றிக் கொள்ள அனுமதிக்கக் கூடிய இடங்களில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கு அனு மதி வழங்க வேண்டும் என்று விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரனும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, சென் னைக்குள்ளேயே பயணி களை ஏற்றிச் செல்ல அனு மதி வழங்கினால், கிளாம் பாக்கம் செல்வதற்கு முன்ன தாக பேருந்து நிரம்பிவிடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த தற்கான நோக்கம் வீணாகி விடும் என தெரிவித்த நீதிபதி மஞ்சுளா, ஆம்னி பேருந்து கள் செல்ல அனுமதிக் கப்பட்ட வழித்தடங்கள் கொண்ட வரைபடத்தை தாக்கல் செய்யும்படி தமிழ் நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.