சென்னை,மார்ச் 2- வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். விரை வில் நல்ல செய்தி கிடைக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ‘இந்தியா’ கூட்டணியை அமைத்துள்ளன. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, இந்திய கம்யூனி ஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகு திகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி களுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக் கப்பட்டுள்ளது.
மதிமுக, விசிக, காங்கிரஸ் கட்சிகளு டன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. மிக விரைவில் உடன் பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலை மையிலான குழுவை திமுக தொகுதி பங்கீட்டு குழு சனிக்கிழமையன்று (மார்ச் 2) பேச்சுவார்த்தைக்கு அழைத்தி ருந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹி ருல்லா, “இந்த மக்களவைத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மிக அழுத்தமாகவே சொல்லியிருக்கிறோம். எங்கள் கோரிக் கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினர்”என்றார்.
எங்களுக்கு எந்தத் தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறினார்.
வேல்முருகன்
மனிதநேய மக்கள் கட்சியுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுடன் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக வேல்முருகன் தெரிவித்தார்.