tamilnadu

img

ஜன.16 மாணவர்கள் பள்ளிக்கு வரும் உத்தரவை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:
ஜனவரி 16 மாட்டுப்பொங்கலன்று பிரதமர் உரையைக் கேட்க மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் அமைச்சர் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், பொங்கல்விழாவின் முக்கியத்துவத்தையும் மனமகிழ்ச்சியையும் கெடுக்கும் உள்நோக்கத்திலிருந்து பா.ஜ.க. அரசு விடுபடவில்லை.  கல்வியைக் காவி மயமாக்கவும்” “தமிழர்களின் தொன்மை விழாக்களைச் சீரழிக்கவும்”வழிவகுக்கும் முயற்சிகளைத் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிரதமர் உரையை மாணவ, மாணவிகள் கேட்க நேரலைத் தளங்கள் உள்ளன., மாணவ, மாணவிகள் தங்களின் இல்லங்களில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

;