சென்னை, டிச. 27 - பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று (டிச.28) கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி சாமி சிவானந்தா சாலையில் போராட்டம் நடைபெறும். இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி வாக்குறுதி தர வேண்டும். அரசு எடுக்கும் நிலை பாட்டை தொடர்ந்து அடுத்தகட்ட இயக்கத்தை முடிவு செய்வோம் என்றார்.