tamilnadu

ஜெ. விசாரணை ஆணையம்: அப்பல்லோ மேல்முறையீடு

சென்னை, ஏப்.10-மருத்துவக்குழுவை அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. தங்கள் தரவுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுவதால், மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.தற்போது உச்சநீதிமன்றத்தில் அப் பல்லோ நிர்வாகம் மேல் முறையீடு செய் துள்ளது. இதன் காரணமாக சம்மன் அனுப்பி உள்ள போதும், ஆறுமுகசாமி ஆணையத் தில் மருத்துவர்கள் இன்று ஆஜராகவில்லை. இதுகுறித்து அறிந்த ஆறுமுகசாமி, வரும் 25ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

;