tamilnadu

img

தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு

சென்னை,பிப்.23- தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ‘தகவல் தொழில்நுட்ப உமேஜின்’ என்ற தகவல் தொழில்நுட்ப  உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத் தில் 2 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த மாநாட்டை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின்  பிப்.23 வெள்ளியன்று தொடங்கி வைத்தார்.

இரண்டு கனவுகள்
எனக்கு இரண்டு கனவுகள் உள் ளன. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லி யன் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும். இரண்டு, உல கத்தின் மனிதவள தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அதற்கான முழு ஈடுபாட்டுடன் என்னை  நானே அர்ப்பணித்துக் கொண்டி ருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

ஐ.டி. துறையின் வளர்ச்சியும் மாற்ற மும் தான் இந்த ஆட்சியின் தனித் தன்மை. அனைத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி 5ஜி அலைக்கற்றை அமைப்பை துரிதப்படுத்தினோம். தொழில்நுட்பத்தில் உலக  நாடுகள் எந்த வகையான முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உரு வாக்க உழைப்போம் என்று முதல் வர் தமது உரையில் தெரிவித்தார்.