சசிகலாவை சிறைக்கு அனுப்பியது பாஜக அரசும், மோடியும் தான். இரட்டை இலை சின்னம் பெற பணம் கொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. பணம் வாங்கியவர் இன்னும் திகார் சிறையில் உள்ளார். டிடிவி தினகரன் மட்டுமே வெளியே வந்துள்ளார். சிறையில் தள்ளியது பாஜக தானே, அப்போதெல்லாம் வீராப்பாக பேசிய டிடிவி தினகரன், இப்போது ஏன் பாஜகவுடன் சேர்ந்து தேனி தொகுதியில் நிற்கிறார்?” என்று தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.