சிஐடியு சங்கத்தை முதன்மை சங்கமாக தேர்வுசெய்ய வேண்டியது அவசியம்! என்எல்சி தொழிலாளர்களிடம் அ.சவுந்தராசன் பிரச்சாரம்
கடலூர், ஏப்.22- சிஐடியு சங்கத்தை முதன்மை சங்கமாக தேர்வு செய்யவேண்டியது தொழி லாளர்களின் நலன்களை பாதுகாக்கவும் என்எல்சி தொடர்ந்து பொதுத்துறை யாக நீடிக்கவும் உதவும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெற உள்ளது. சிஐடியு தொழிற்சங்கம் வரிசை எண் 1ல் போட்டியிடுகிறது. சிஐடியு தொழிற் சங்கத்தை முதன்மை சங்கமாக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வலி யுறுத்தி இரண்டா வது அனல் மின்நிலைய வாயிலில் தொழிலாளர்க ளிடம் சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராசன் பிரச்சாரம் மேற்கொண்டார். என்எல்சியில் நடைபெற உள்ள தேர்தலில் ஒரு பக்கம் சிஐடியுவும் மற்றொரு பக்கம் நிர்வாகத்தின் பக்கம் சில தொழிற் சங்கங்களும் உள்ளன. சில தொழிற்சங்கங்கள், சங்கத்தை தொழி லாக நடத்திக் கொண்டி ருக்கின்றன. எல்லாவித மான தவறான நடவடிக்கைகளையும் செய்து வருபவர்கள் நிர்வாகத்தின் பக்கம் இருக்கிறார்கள். நாம், தொழி லாளிகளுக்காக வாக்கு சேகரித்துக் கொண்டி ருக்கின்றோம். ஒரு தொழிற்சங்கத்தின் முக்கிய பணி என்பது போராடி, வாதாடி பாரபட்சங்களை தீர்ப்பதுதான். என்எல்சி நிறுவனத்தில் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவத்தில், லோன் கொடுப்பதில் வித்தியாசம் காட்டுகிறார்கள். இந்த வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போனஸுலும் பிரச்சனை இருக்கிறது. இதை ஒட்டி தான் பல்வேறு பெரும் போராட்டங்கள் இங்கே வெடித்தது. கடந்த 4ஆண்டுகளில் பேச்சுவார்த்தையில் உள்ள சங்கங்கள் இதையெல்லாம் ஏன் தீர்க்கவில்லை. சி.ஆப் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய விஷயம். அதை பெறுவதற்கு மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய நிலை என்எல்சி நிறுவனத்தில் உள்ளது என்றால் அதைவிட பரிதாப நிலை எதுவும் இல்லை. கடந்த நான்காண்டுகளாக அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று விளக்குவார்களா?. தொழிலாளர்களுக்கான சட்ட பிரச்சனைகளில், நியாயத்திற்கான குரல் கொடுத்து போராடாமல் இருந்ததுதான் கடந்த நான்கு ஆண்டுகளாக பேச்சு வார்த்தையில் இருந்த தொழிற்சங்கங்களின் சாதனையாக உள்ளது என்றார். எனவே தொழிலாளர்க ளின் நலனுக்காகவே, தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட சங்க மாக உள்ள சிஐடியு சங்கத்தை ஆதரித்த முதன்மை சங்கமாக தேர்வு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிரச்சாரத்திற்கு சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் தலை வர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எஸ்.திருஅரசு, அலுவலக செயலாளர் எம்.அன்பழகன், மாவட்ட துணை தலை வர் ஏ.வேல்முருகன், ஜி. குப்புசாமி, வி.முத்துவேல், மாநில குழு உறுப்பினர் அரசு, முன்னாள் கூட்டுறவு நாணயசங்கத்தலைவர் எம்.மீனாட்சிநாதன், சிபிஎம் நகர செயலாளர் ஆர். பால முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.