சென்னை, ஆக.29- தொடர்ந்து ஐந்து முறை ஊரடங்கால் ஏற்பட்ட பலன் என்ன? மேலும் ஊரடங்கைத் தொடராது - இ-பாஸ் முறையையும் ரத்து செய்வது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை யில், கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு - கொரோனா (கோவிட் 19) தொற்று நோய்ப் பரவல் காரணமாக 5ஆம் முறையாக தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை அமலில் இருந்து வருகிறது. இதனால் தொற்று நோய் பாதிப்பு வெகு வாகக் குறைந்துவிட்டது என்று பெரு மிதப்படவோ, இதனை நீட்டிக் கொண்டே போனால், கொரோனா தொற்று அடியோடு மறைந்து ஒழிந்து விடும் என்றோ உறுதி படக் கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. பொருளாதாரம் நசிந்து, பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை யில்லாத கொடுமையினால், வருவாய் இழந்து, குடும்பத்தோடு பல வாழ்விணை யர்கள் தற்கொலை செய்துகொள்வது சர்வ சாதாரணமான நிகழ்ச்சியாக ஆகிவிட்டது. பணப்புழக்கம் பெரிதாக இல்லை. மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவி, ‘யானைப் பசிக்கு சோளப்பொறி’ என்ற கேலிக்கூத்துப் போல் அமைந்துவிட்டது. போக்குவரத்து வாகனங்கள் முடக்கப் பட்டுவிட்ட நிலையில், தவிர்க்க இயலாத நிலையினால் திறக்கப்படலாம் என்று அனு மதிக்கப்பட்ட தொழிற்சாலைகளும், சிறு குறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிவோரும் அங்கே சென்று வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கொரோனா தொற்று - தடுப்பு ஊசி நடை முறை என்பதெல்லாம் சரியாகச் செயல்பட இன் னும் பல மாதங்கள் ஆகும் என்பதே யதார்த் தம். எனவே, அதுவரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டாம் - அது தவறான முடிவாகும். சில நாள்களுக்கு முன்பு மதவாதிகளை அழைத்து கலந்து ஆலொசித்ததைப்போல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சி, சமூக அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி கலந்தா லோசித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கி.வீரமணி அந்த அறிக்கை யில் வலியுறுத்தியுள்ளார்.