சென்னை,ஜூலை 23- உதய் மின்திட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக அரசு கையெழுத்திட்டதே தமிழ்நாட்டில் தற்போதைய மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் இதில் அதி முக போராட்டம் நடத்துவது வேடிக்கை யானது என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சாடியுள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஜூலை 23 செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டம் நடத்தி யது வேடிக்கையானது.
பிள்ளையை யும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல அதிமுக செயல்பாடு உள்ளது. ஒன்றிய அரசு உதய் திட்டத்தை கொண்டுவந்தபோது முதல்வராக இருந்து ஜெயலலிதா அதை கையெ ழுத்திட மறுத்துவிட்டார். உதய் மின் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனி சாமி ஆட்சியில்தான்.
அதிமுக அரசின் 10 ஆண்டு திறனற்ற ஆட்சியால் மின்துறைக்கு ரூ.1,13,266 கோடி நிதிஇழப்பு ஏற்பட்டது. உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்ட தால்தான் மின்கட்டணம் உயர்த்தப்படு கிறது. நிதிச்சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம். தமிழ கத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம். அதிமுக ஆட்சியில் பலமுறை மின் கட்டணங்கள் உயர்த்தப் பட்டன. அதிமுக ஆட்சியில் 2012-இல் 3.7 சதவீதம்,. 2013-இல் 3.5 சதவீதம், 2014-இல் 16.93 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி கொள்முதல் ஊழல் நடை பெற்றது என்பதை அனைவரும் அறி வர். மின்சார வாரியத்தின் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.32,104 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கி யுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ கத்தில் தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.