tamilnadu

கூட்டாட்சிக்கும் தனிக்கட்சி சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தேர்தல் இது

சென்னை, ஏப். 4- கூட்டாட்சியா - தனிக்கட்சி சர்வாதி காரமா என்ற தத்துவங்களுக்கிடையே  நடக்கும் இந்த தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச்செய்ய வேண்டும் என திருவொற்றியூர் நடை பெற்ற கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.

வடசென்னை மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட் பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூர் மார்க்கெட் பகுதியில் பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கடைய்யா தலை மையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், இந்த மக்களவை தேர்தல் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் தேர்தல் இல்லை. ஜனநாயகமா - சர்வாதிகாரமா, மதச்சார்பின்மையா - மதவெறியா, கூட்டாட்சியா - தனிக்கட்சி சர்வாதிகாரமா இந்த இரண்டுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.  எனவே பாஜகவை தோற் கடிப்பது மட்டுமல்லாமல், அதிமுகவை தோற்கடித்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மோசமான மோடி ஆட்சி
ஜவஹர்லால் நேரு, நரசிம்மராவ், வி.பி.சிங், வாஜ்பாய் உட்பட பல பிரதமர்கள் ஆட்சி செய்திருக்கிறார் கள். ஆனால் பிரதமர் மோடியை போல் ஒரு மோசமான ஆட்சி இதுவரை நடை பெறவில்லை. காந்தியை சுட்டுக் கொன்றதற்கு பின்னால் எந்த தத்துவம் இருந்ததோ அந்த தத்துவம்தான் தற்போது பாஜக ஆட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் என்று மோடி கூறினார். ஆனால் கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டதா? என்றால் இல்லை. மாறாக ஊழலில் ஊறித் திளைக்கிறது பாஜக. தேர்தல் பத்திரம் மூலம்  அது மிகப்பெரிய ஊழலில் ஈடுப்பட்டதே அதற்கு சாட்சி. தேர்தல் பத்திரத்தை உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு  விரோதமானது என்றும் ரத்து செய்ய வேண்டும் என்றும் அதன் முழு விவ ரங்களை அளிக்க வேண்டும் என்றும் உறுதியாக வலியுறுத்தியதால் இப்போது தேர்தல் பத்திரம் மூலம் பாஜக செய்த ஊழல் வெளி வந்தி ருக்கிறது. இந்திய சுதந்திர வரலாற்றில்  கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத மகா ஊழலில் பாஜக சிக்கியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று மோடி கூறினார். ஆனால் கடந்த 10 ஆண்டு களில் மொத்தமாக கூட 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கவில்லை. மாறாக வேலையின்மை அதிகரித்துள்ளது. தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்த கட்சிதான் பாஜக. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பன்மடங்கு உயர்த்தி விட்டனர். இதனால் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இவர் களுக்கு சாதாரண ஏழை எளிய மக்கள் மீது அக்கறை கிடையாது. இவர்களின் கவலையெல்லாம் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் குறித்துதான் என்றார்.

வடமாநிலங்களில் பாஜக வீழ்த்தப் பட்டு இந்தியா கூட்டணி ஆட்சி அமை யக்கூடிய நல்லசூழல் உருவாகி இருக் கிறது. தேர்தல் பத்திரத்தின் மூலம் பாஜக செய்த ஊழல் விவரங்கள் வெளி வந்த பிறகு பாஜகவின்  தோல்வி மேலும் உறுதியாகி விட்டது. அந்த தோல்வி பயத்தின் காரணமாகவே, தில்லி முதல மைச்சர் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். கெஜ்ரிவால் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததாக ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். அதே நேரம் அந்த  பிரச்சனையில் சம்பந்தப்பட்ட நிறுவன ங்களின் இயக்குநர் சரத் சந்த் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் தேர்தல்  பத்திரம் மூலம் ரூ.5 கோடி  கொடுத்தார். அதனால்தான் அவர் விடுதலையாகி வெளியே வருவதற்கு அமலாக்கத் துறை எந்த ஆட்சேபனையும் தெரி விக்கவில்லை. அவர் வெளியே வந்த வுடன் பாஜகவுக்கு மேலும் 50 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் கொடுத் துள்ளார். உண்மையிலேயே சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் சரத் சந்த் ரெட்டியைத் தான் கைது செய்ய வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுக்கும் பாஜகவையும் அதற்கு துணை போகும் கட்சிகளையும் இந்த பகுதி மக்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் பத்திரம் மூலம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்ட பாஜகவை தோற்கடிக்க வேண்டும். வடசென்னை மக்களின் உரி மைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திமுக வேட்பாளர் கலாநிதி வீரா சாமிக்கு வாக்களித்து மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் திமுக சட்டமன்ற உறுப்பி னர் கே.பி.சங்கர், மண்டலக்குழு தலை வர் தி.மு.தனியரசு, பகுதிச்செயலாளர் வை.மா.அருள்தாசன், சிபிஎம் வட சென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.கருணாநிதி, செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம், விசிக மண்டல துணைச் செயலாளர் ஜான் அலெக்சாண்டர், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் உஷா ஜெயச்சந்தி ரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் பேசினர். முன்னதாக பிருந்தாவன் நகர் கிளைச்செயலாளர் டி.ஆறுமுகம் வர வேற்றார். ராமநாதபுரம் கிளைச்செய லாளர் டி.குமார் நன்றி கூறினார்.