சென்னை, ஏப்.25- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ. செல்வம் ஆகியோர் தமிழக அரசின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 முதல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் (IFHRMS) மூலமே ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது இந்த மென்பொருள் சில மாற்றங்கள் செய்யப்பட்டு ‘களஞ்சியம்’ (Kalanjiyam) என்று அறிமுகப்படுத்தப் பட்டு, வருமான வரிப் பிடித்தமும் மேற் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இந்த நிதியாண்டில் (2024-2025) வருமான வரிப் பிடித்தத் தில், ஊழியர்களின் விருப்பத்தின் அடிப்ப டையில்- பழைய நடைமுறை, புதிய நடை முறை (Old Regime / New Regime) என தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனை தேர்வு செய்யாத ஊழியர்களுக்கு (New Regime) புதிய நடைமுறை என்ற அடிப்ப டையில் வருமான வரி பிடித்தம் செய்யப் படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 2024 ஏப்ரல் முதல் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்தும் போது, 1) ஊழியர்கள் தேர்வு செய்த விருப் பத்தின் அடிப்படையில் அல்லாமல், அள வுக்கு அதிகமாக- சில ஊழியர்களுக்கு அனைத்து பிடித்தங்களையும் கழித்து விட்டு- அவர்கள் வாங்கும் மாதாந்திர ஊதியத்தைவிட அதிகமாக வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இது போல் ஓய்வூதியம் பெறும் ஊழியர் களுக்கு அதிகமான தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. 2) வருமானவரி பழைய நடைமுறை (Old Regime) செயல் படுத்தும்போது அதில் வரிவிலக்கு பெற்ற பல்வேறு இனங்கள் (உதாரண மாக வீட்டுக்கடன், வட்டி, தனி நபர் காப்பீடு, தொழில் வரி, கல்விக்கடன் மருத்துவக் காப்பீடு, அஞ்சல் காப்பீடு, மாற்றுத் திறனாளிகளுக்கான விலக்கு) உள்ளிட்டவைகளை பதிவேற்றம் செய்வ தற்கான வருமான வரி அறிவிப்பு (Income tax declaration), வருமான வரி விலக்கு (Income tax deduction) வசதிகள் ‘களஞ்சியம்’ மென்பொரு ளில் தற்பொழுது விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது.
இதுநாள் வரை வருமானவரி பிடித்தம் செய்யும் வரம்பிற்குள் வராத அடிப்படை ஊழியர்களுக்குக் கூட வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது. வருமான வரிப் பிடித்தம், முழுக்க முழுக்க ‘விப்ரோ’ என்ற தனியார் நிறு வனத்தின் கட்டுப்பாட்டிலேயே இயங்கிக் கொண்டு இருக்கிறது. அதைத்தொட ர்ந்து வருமானவரி எவ்வாறு பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்ற கணக்கீடு இல்லை. இப்பணியை பணம் பெறும் அலுவலர்களிடமே ஒப்படைப்பது என்பது சிறப்பானதாக இருக்கும்.
எனவே, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) மூலமான வருமான வரிப் பிடித்தத்தில் தற்போதுள்ள குளறுபடி களை சரி செய்வதற்கும், உரிய மாற்றங் களை செய்த பின்னரே வரிப் பிடித்தம் செய்வதற்கும், ஏப்ரல் மாத ஊதியத்தை உரிய நேரத்தில் பெறுவதற்கும் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல “ஊதியத்தில் 10 விழுக் காடு வரிப் பிடித்தம் செய்யும் புதிய வரு மான வரித் திட்டத்தையே திரும்பப்பெற வேண்டும்” என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சங்கர் தமது அறிக்கையில் வலி யுறுத்தியுள்ளார்.