tamilnadu

img

இபிஎஸ் நேரம் கொடுத்தால் சந்திப்பேன்

சென்னை, நவ.7- நேரம் கொடுத்தால் எடப்பாடி பழனிசாமியையும் சந்திப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் ‘நீட் விலக்கு - நம் இலக்கு’என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்திட்டு, குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கும் கையெ ழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து நீட் விலக்கு வலியுறுத்தி, தொடங்கப்பட்டுள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை  முன்னெடுப்பதற்கு அமைச் சர் உதயநிதி ஸ்டாலின், மதி முக பொதுச் செயலாளர்  வைகோவையும் சந்தித்து கையெழுத்து பெற்றார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திப்பீர்களா, குறிப்பாக எடப்பாடி பழனிசாமியை சந்திப்பீர்களா? என கேள்வி  எழுப்பினார். அதற்கு, ‘நேரம்  கேட்டுள்ளோம். எல்லோ ரையும் சந்திப்போம்’ என் றார்.