சென்னை, பிப். 11 - மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் ராமர் முகத்தை காட்டி பாஜகவினர் ஓட்டு கேட்கப் பார்க்கிறார்கள்; ஆனால், பாஜக அர சியல் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை யில் அளித்த பேட்டியில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டின் விடுதலை போராட்டம் துவங்கி, அனைத்து விதமான ஒடுககு முறைகளுக்கும் எதிராக போராடிய மகத்தான தலைவர் சிங்காரவேலர். கம்யூனிச கொள்கையை தமிழ்நாட்டில் பரப்பியதில் மூத்த தலைவர். மே தினத்தை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாடியவர். இந்தியாவில் சாதி, மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடு கிறது என்று அன்றே கூறியவர்.
அவரை இன்று நினைவு கூர்கிறோம். தற்போது இந்தியாவில் மதவெறி சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டி ருக்கின்ற ஆபத்தான நிலை உள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கொக்கரிப்பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும். பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாடும் மோசமாக மாறி விடும். மக்களை பிளவுபடுத்தும் அரசியலை பயன்படுத்தி நாட்டைக் கைப்பற்றலாம் என்று பாஜக பார்க்கிறது.
மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் ராமர் முகத்தை காட்டி பாஜக-வினர் ஓட்டுக் கேட்க பார்க்கிறார்கள். ஆனால், எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது. அண்ணாமலை பழைய இரும்பு சாமான் வியாபாரி போல கூவி, கூவி விற்றாலும் அவருக்கு தமிழ்நாட்டில் முகவரி இருக்காது. கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் ஆளு நரை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள், ஆனால் ஆளுநர்களால் எந்த அரசியல் மாற்றமும் ஏற்படாது.
12, 13 தேதிகளில் திமுக-வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடை பெறும், பேச்சுவார்த்தையின் முடிவு சுமுக மான முறையில் அமையும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறினார்.