சென்னை, நவ. 2 - கணினி பட்டா வழங்க விடாமல் அதிமுக-வினர் இடையூறு செய்வதை தடுக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியிடம் குடியி ருப்போர் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குடி யிருப்போர் நலச்சங்த்தின் செயலாளர் எஸ்.வெள்ளை ச்சாமி அளித்துள்ள புகார்மனுவில் கூறியிருப்ப தாவது: மதுரவாயல் வட்டம், நெற்குன்றம் சிடிஎன் நகரில் 35 வருடங்களாக 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அறியா கிரையம் பெற்ற இவர்க ளுக்கு பட்டா வழங்க உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்பிறகு வட்டாட்சியர் குடியி ருப்போர் நலச் சங்க நிர்வாகி களை அழைத்துப் பேசி பட்டா வழங்கினார். விரைவில் கணினி பட்டா வழங்குவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு கடந்த 3 ஆண்டுகளாக கணினி பட்டா கேட்டு மனு கொடுத்தும் வழங்கவில்லை. இதனை யடுத்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், 8 வாரத்திற்குள் கணினி பட்டா வழங்க 2019 மார்ச் 3 ஆம் தேதி அன்று உத்தரவிட்டது. நீதிமன்ற ஆணையை செயல்படுத்தக் கோரி மே.5 ஆம் தேதி வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கணினி பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது. இதனிடையே ஆளும் கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படு த்தி, சாலை ஆக்கிர மிப்புகள், பொது இட ஆக்கிர மிப்புகளுக்கும் பட்டா வழங்காமல், சிடிஎன் நகர் மக்களுக்கு கணினி பட்டா வழங்கக் கூடாது என்று வட்டாட்சியரை நிர்பந்தி க்கின்றனர். பொதுமக்களி டம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இவ்வாறு ஆளும் கட்சியினர் செய்கின்றனர். எனவே, ஆட்சியர் தலையிட்டு, கணினி பட்டா வழங்கும் நட வடிக்கை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் கூறப்பட்டுள்ளது.