tamilnadu

img

சர்வதேச யோகா தினம் கலைமகள் பள்ளி உலக சாதனை

சர்வதேச யோகா தினம் கலைமகள் பள்ளி உலக சாதனை

திருவள்ளூர், ஜூன் 21-  கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப் பட்டது.  பள்ளியின் செயலர் டாக்டர் ஞானதீபன் தலைமை யில் நடந்த விழா வில், நிறுவனர் மற்றும் முதல்வர் டாக்டர் திருஞானம், தாளாளர் தேன்மொழி திருஞானம், துனண முதல்வர் அனிதா, ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மைய நிறுவனர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்த னர்.  விழாவின் போது, பள்ளி மாணவ, மாணவியர் 325 பேர், சுப்த வஜ்ராசனத்தில், தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் அமர்ந்தபடி, வஜ்ராசனம் எனும் யோகாசன உருவத்தை ஏற்படுத்தினர்.  இவர்களது முயற்சி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. நோபல் உலக சாதனை தீர்ப்பாளர்கள் ஹேமந்த்குமார், பரத்குமார், பரணிதரன் ஆகியோர் உலக சாதனைக்கான சான்றை பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர். தொடர்ந்து சர்வதேச யோகா தினத்தின் சிறப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.