கிருஷ்ணகிரி, ஆக. 6- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பன்னாட்டு கணிதத் துறை மற்றும் கணிதவியலாளர் மன்ற மாநாடு கல்லூரி நிறுவனர் சந்திரசேகர் தலை மையில் 2 நாட்கள் நடைபெற்றது. கணிதத்துறை பேராசிரியர் வி.கோவிந்தன் வரவேற்றார். முதுகலை கணிதத் துறை தலைவர் ராகவன் மாநாட்டின் நோக்கம் குறித்தும், மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சாரதா சிவம் நரம்பியல் குறியீட்டு ஒருங்கிணைப்பு குறித்தும், சவுதி அரேபியா கிங் அப்துல்லா பல்கலைக்கழக பேராசிரியர் சிவசங்கரன் திரவ இயக்கவியல் குறித்தும், பெங்களூரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கர் வெப்பச் சலன பரிமாற்றத்தின் கோட்பாடு குறித்தும் பேசினர். மாநாட்டில் ஆய்வாளர்கள், மாணவர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பேராசிரியர்களின் ஆய்வுக் கட்டுரைகள் நூலாக வெளியிடப்பட்டது. பேராசிரியர் பழனி நன்றி கூறினார்.