tamilnadu

ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச மலர் ஏல மையம்

 சென்னை, ஜூலை 18- சட்டப்பேரவையில் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்த புதிய அறிவிப்புகள் வருமாறு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதக மான பருவ நிலையின் காரணமாக 39,383 மெட்ரிக்  டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படு கிறது. இப்பகுதி யில் சாகுபடி செய்யப்படும் மலர்கள், உள்ளூர் சந்தைகளில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலும், அண்டை மாநிலங்களிலும் சந்தைப்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பெங்  களூருவில் உள்ள ஏல மையம் மூலமாக ஏற்றுமதி  செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூ ரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும்  என கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய  மாவட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள், மலர்  ஏற்றுமதியாளர்கள் ஆகியோரிடமிருந்து கோரிக் கைகள் ஏற்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.

தலித் மக்களுக்கு சமுதாயக் கூடங்கள்
2 புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலக  மற்றும் குடியிருப்பு கட்டடங்கள், 13 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலுவலக மற்றும் குடியிருப்பு  கட்டடங்கள் ரூ.66.44 கோடி செலவில் கட்டப்படும். பழங்குடியின மக்களுக்கு வீடுகள், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை உட்கட்ட மைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ. 50 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும். ஆதிதிராவிட மக்களுக்காக 5 கிராமங்களில், அனைத்து வசதி களுடன் கூடிய 5 சமுதாயக் கூடங்கள், தலா 1 கோடி  ரூபாய் வீதம், 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்,  3 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்  பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்  தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.