tamilnadu

முதலமைச்சர் அறிவிப்புக்கு, இடைநிலை ஆசிரியர் சங்கம் வரவேற்பு...

சென்னை':
அரசு ஊழியர், ஆசிரியர்கள் நலன் சார்ந்து செப்.7 அன்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13 அறிவித்த, மாணவர் விகிதாச்சாரத் திற்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பது உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம்உயர்த்த வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பணியிடத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

;