tamilnadu

img

உளவுத் துறை அலுவலக மேலாளர் கொரோனாவுக்கு பலி

சென்னை:
கொரோனா பாதிப்பு காரணமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர் உயிரிழந்தார்.தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள், தீயணைப்புத் துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள உளவுத்துறை அலுவலக மேலாளர் சந்திரசேகர் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 17 ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  கொரோனாவுக்கு அவர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

;