தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 32,000 மாற்று மதத்தை சேர்ந்த பெண்கள் முஸ்லீம் மதத்திற்கு மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று அந்த ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இப்படத்திற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மே 5 ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் வெளியிட்டால் எதிர்ப்புகள் உருவாகும் என்று உளவுத்துறை தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.