சென்னை:
தமிழக அரசின் எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை கலைவாணர் அரங்கில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மேலும், அமைச்சரின் அறிவிப்புகளின் செயலாக்க நிலை, பணிகளின் முன்னேற் றம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.2016-2017 முதல் 2019-2020 வரையிலான நிதியாண்டுகளின் மானியக் கோரிக்கை எண்.30இல் இடம் பெற்ற அறிவிப்புகளின் செயலாக்கத்திற்காக மொத் தம் ரூ.11.61 கோடி நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டது.2016-17 , 2017-18 , 2018-19 - ஆம் ஆண்டுகளில் ரூ. 9.04 கோடி மதிப்பீட்டில் இயந்திரங் கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.2019-2020 ஆண்டில் ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதுடன் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் அரசு மைய அச்சகம் உள்ளிட்ட அனைத்து அலகுகளிலும் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் , ஆணையரகம் மற்றும் ஒன்பது அலகுகளில் செயலாக்கத்தில் உள்ள கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.