tamilnadu

img

தொகுப்பூதிய செவிலியர் மாறுதல் கலந்தாய்வை மீண்டும் நடத்த வலியுறுத்தல்

சென்னை, நவ. 21 -
தொகுப்பூதிய செவிலியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் உள்ள குறைகளை சரி செய்து, வெளிப்படைத் தன்மையுடன் மீண்டும் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மருத்துவமனைகளில் பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வு நவ.20-22 வரை நடத்தப்படுகிறது. அதை வரவேற்கிறோம். அதேசமயம் வெளிப்படைத் தன்மை இல்லாதது வருத்தமளிக்கிறது.

கலந்தாய்வின் போது, மருத்துவ மனைகளில் மொத்தமுள்ள காலிப் பணியிடங்களை காட்டாமல், சொற்ப மான இடங்களை மட்டுமே காட்டப் பட்டது. குறிப்பாக, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 80 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், 2 பணியிடங்கள் மட்டும் காட்டப்பட்டது.

அதேபோன்று, சிவகங்கையில் 27 காலி பணியிடங்களில் 6 இடங்கள்,  திருவண்ணாமலையில் 45 பணியிடங் களில் 9 இடங்கள், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களில் 16 இடங்கள் என குறைத்து காட்டப் பட்டது. மேலும், பணியிட மாறுதலுக் கான விண்ணப்பம் செய்த செவிலி யர்கள் பலரது பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறவில்லை.

முதல் நாள் கலந்தாய்வில் பணி  மாறுதல் பெறும் செவிலியர் பணியிடம் காலியிடமாகத்தான் அறிவிக்கப்படும். மறுநாள் கலந்தாய்வில் அந்த இடங்களை காண்பித்து நிரப்பப்படும். அந்த முறை இந்த கலந்தாய்வின் போது மறுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த கலந்தாய்வில் செவிலியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், வெளிப் படை தன்மையற்ற, குறைபாடுகளுடன் கூடிய இந்த கலந்தாய்வின் காரணமாக செவிலியர்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

இதில் பெரும்பான்மையான செவிலியர்கள் பணியிடம் ஏதும் தேர்வு  செய்யாமல் ஏமாற்றத்துடன் திரும்பி னர். இந்த நிகழ்வு அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், துறை செயலாளர் தலையிட்டு குறைகளை களைந்து, வெளிப்படைத் தன்மையுடன் மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.