சென்னை,ஜன.31- தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவ தும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டம் ஜன.31 முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
அரசின் அனைத்து நலத் திட்டங்க ளும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 23 அன்று அறிவித் தார். இத்திட்டம் ஜனவரி 31 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, சென்னை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும், குறிப் பிட்ட மாவட்டத்தில், மாதந்தோறும் 4-வது புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறும்.
முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல், ஆட்சியரால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவி லான இதர உயர் அதிகாரிகள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். ஆய்வின் போது பெறப்படும் கருத் துகளின் அடிப்படையில், மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்குதல், திட்டங்களை விரைவு படுத்துதல் தொடர்பான ஆட்சியர்கள் உரிய தீர்வு காண்பார்கள்.
அன்றைய தினம், மக்களை மாவட்ட ஆட்சியர்கள் நேரடி யாக சந்தித்து, அவர்களது குறை களை கேட்டறிந்து, மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். அரசின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற ஏதுவாக நடத்தப் படும் இந்த முகாமை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டா லின் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை துறை அலுவலர்கள் கனிவோடு பரிசீலித்து, தாமதம் இன்றி அவற்றை நிறைவேற்ற வழிவகை காண வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இத்திட்டம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோ சனை நடத்தியதுடன், பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கியுள்ளார்.